இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி
இந்திராவின் மகனான சஞ்சய் காந்தியை பலருக்கும் நினைவே இருக்காது.இப்போது உள்ள தலைமுறைக்கு அவர் யாரென்றே தெரியாது என்று நினைக்கின்றேன்.உத்தம புருசன்,புண்ணிய ஆத்மா என்று ராஜீவைக் கொண்டாடும் சோனியா காங்கிரஸ்காரர்கள் கூட சஞ்சய் என்றால் சிறிது அடக்கிவாசிப்பார்கள்.
எந்தப் பதவியிலும் இல்லாது,இந்திராவின் மகன் என்ற இறுமாப்பில் அவர் போட்ட ஆட்டம் எவ்வளவு.தமிழகம் தவிர அவரது கொட்டம் இந்திராவாலே அடக்க முடியாமல் இருந்ததாகக் கூறுவர்.தமிழகத்தில் 1967-லே காங்கிரஸின் அஸ்தியைக் கரைத்தாகிவிட்டது.
இந்தியாவில் அவசரகாலத்தில் சஞ்சய் போட்ட ஆட்டத்திற்கு 100 முறையாவது தூக்கில் போட்டிருக்க வேண்டும்.ஐ.கே.குஜ்ரால் இவரது செயல்களைப் பொறுத்துக் கொள்ளாமல் மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டார்.ஆனால் இவருக்குக் கூட்டிகொடுத்தே கர்நாடகத்தில் குண்டுராவ், மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே போன்றோர் பதவிகளைப் பெற்றார்கள்.
அதிகமாக ஆடுபவர்கள் மிகவிரைவில் மரணமடைவார்கள். இவரது அட்டகாசம் எல்லை மீறிய நிலையில் இந்திராவே இவரை விமான விபத்தில் கொன்றுவிட்டார் என்றும் பேசுபவர்கள் உண்டு. அதை நான் நம்பவில்லை. எப்படியோ தன் குடும்பத்தினர் செய்த பாவங்களுக்குச் சம்பளமாக,அல்லது
அவர் செய்த பாவங்களுக்குச் சம்பளமாக சஞ்சய் காந்தியின் மரணம் நிகழ்ந்துள்ளது என்றே நான் நம்புகின்றேன்.
அவர் மரணமடைந்த ஜூன் 23-ம் நாளை தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் கூட கொண்டாடலாம்.